குண்டும் குழியுமான சாலை

Update: 2026-01-25 12:47 GMT

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் ரங்கநாதன் தெரு சுரங்கப்பாதை அருகில் உள்ள சாலை எப்போதும் வாகனங்கள் செல்லும் முக்கியமான சாலை. பரபரப்பான இந்த சாலையில் ஆங்காங்கே குண்டும் குழியுமாக பள்ளங்கள் உள்ளன. இதனால் வாகன ஓட்டிகளும் பெரிதும் சிரமம் அடைகின்றனர். மேலும் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாய நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்