சாலையின் நடுவே மின்கம்பம்

Update: 2026-01-25 10:13 GMT

திருச்சி மாநகர் உறையூர் பாத்திமா நகர், அம்மன் நகர் விரிவாக்க பகுதியில் சாலையின் நடுவே மின்கம்பம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் மின்கம்பம் இருப்பது தெரியாமல் அதில் மோதி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட மின்சார வாரியத் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையின் நடுவே உள்ள மின்கம்பத்தை அகற்றி சாலையோரம் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்