பழனி நகராட்சி 26-வது வார்டு பாரதிநகர் பகுதியில் பாதாள சாக்கடை பணிகளால் சாலை சேதமடைந்து மண்பாதையாக மாறிவிட்டது. இதனால் மழைக்காலங்களில் அந்த சாலை சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. அப்போது அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.