ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும் அதன் சுற்றுப்புற கிராம பகுதிகளில் உள்ள பெரும்பாலான சாலைகள் சேதமடைந்து காணப்படுகிறது. சாலையில் பயணிப்பதால் வாகனஓட்டிகள் கீழே விழுந்து சிறு, சிறு காயமடைகின்றனர். விபத்து அபாயம் உள்ளதால் சில வாகனஓட்டிகள் சாலையில் பயணிப்பதை தவிர்த்து வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?