உத்தமபாளையம் பகுதியில் உள்ள மாநில நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டிருக்கும் வேகத்தடைகளில் பூசப்பட்ட வெள்ளைநிற கோடுகள் மறைந்துவிட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வேகத்தடை இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே வேகத்தடைகளில் வெள்ளைநிற கோடுகளை பூச சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.