அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் ஸ்ரீபுரந்தானில் உள்ள காலனி தெருவில் உள்ள சாலைகள் கப்பிக்கற்கள் பெயர்ந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் நடந்து செல்வதற்கும், வாகனங்களில் செல்வதற்கும் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் அடிக்கடி நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.