அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் கீழகோவிந்தபுத்தூர் கிராமம் காலனி தெரு பகுதியில் உள்ள மயானத்திற்கு செல்லும் சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் கப்பிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் இறந்தவர்களின் உடல்களை மயானத்திற்கு கொண்டு செல்வதற்கு சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்கள் நலன்கருதி இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.