பொதுமக்கள் அவதி

Update: 2026-01-11 08:05 GMT

ஒசரவிளையில் இருந்து பொற்றையடிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் 2 கி.மீ. தூரம் உள்ள சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களில் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தெருவிளக்குகள் பழுதடைந்து எரியாமல் காணப்படுகிறது. இதனால் இரவு நேரம் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி பழுதடைந்து காணப்படும் தெருவிளக்குகளை அகற்றி விட்டு புதிய விளக்குகள் பொருத்தி எரியவைக்க சமபந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அய்யப்பன், குலசேகரபுரம்.

மேலும் செய்திகள்