புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சாத்தம்பட்டி ராப்புசல்விளக்கில் இருந்து சத்யநாதபுரம் வரை உள்ள சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் முற்றிலும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.