குண்டும், குழியுமான சாலை

Update: 2025-12-21 11:48 GMT

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா தெரணி கிராமத்தில் உள்ள பிரதான தார்சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால், தற்போது சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதனால் கர்ப்பிணிகள், வயதானவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதுடன், அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தார்சாலையை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்