திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம் 1-வது வார்டு ரெ.வளவனூர் பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இறந்தவர்களின் உடலை தகனம் செய்ய மயானத்திற்கு கொண்டு செல்லும் பாதையில் சாலை வசதி இல்லாததால், இறந்தவர்களின் உடலை கொண்டு செல்வதில் இப்பகுதி மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மயானத்திற்கு செல்லும் பாதையில் தார்சாலை வசதி ஏற்படுத்தித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.