ஈரோடு முனிசிபல் காலனியில் இருந்து பாரதி தியேட்டர் செல்லும் சாலையின் வளைவில் உள்ள சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு செல்கின்றனர். எதிரே வாகனங்கள் வரும் போது ஒதுங்க முடிவதில்லை. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.