தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை ஈ.பி.காலனியில் பாரதியார் தெரு உள்ளது. இந்த தெருவில் உள்ள சாலை குண்டும்,குழியுமாக உள்ளது. மழைகாலங்களில் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. பொதுமக்கள் சாலை வழியாக நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே,சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.