பள்ளத்தால் விபத்து அபாயம்

Update: 2025-12-07 17:29 GMT
விக்கிரவாண்டி அருகே அத்தியூர்-திருக்கை செல்லும் சாலையின் இருபுறமும் பள்ளமாக உள்ளது. மேலும் கருவேல மரங்களும் சாலையோரத்தில் அதிக அளவில் வளர்ந்துள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் சிக்கி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து சாலையோர பள்ளத்தை சரிசெய்வதோடு, கருவேல மரங்களையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்