சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2025-12-07 11:47 GMT


பட்டுக்கோட்டையை அடுத்த ஆலடிக்குமுளை தாமரைக்குளம் வடகரையில் போடப்பட்டிருந்த சிமெண்டு சாலை தற்போது சேதம் அடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். தற்போது மழை பெய்து வருவதால் மேடு பள்ளங்களில் மழை தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால் பள்ளம் இருப்பது தெரியாமல் பொதுமக்கள் விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், வடகரை 

மேலும் செய்திகள்