சேதமடைந்த சாலை

Update: 2025-12-07 10:15 GMT

தக்கலை சாரோட்டில் இருந்து நூள்ளிகுளம் வழியாக செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் நுள்ளிகுளம் பகுதியில் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மழை காலங்களில் அந்த பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வேகமாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்திரகுமார், சாரோடு.

மேலும் செய்திகள்