சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் சிலர் தங்களது மோட்டார்சைக்கிள்களை அதிவேகத்தில் இயக்குகின்றனர். இதனால் சாலையில் பயணிக்கும் மற்ற வாகனஓட்டிகள், நடைபாதையினர் அச்சத்துடனே பயணிக்கின்றனர். சாலையில் இவ்வாறு அதிவேகத்தில் பயணிப்பவர்களால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் அதிவேகத்தில் பயணிப்போர் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.