ஈரோடு வைராபாளையம் வாட்டர் ஆபீஸ் ரோட்டில் செல்லும் சாக்கடை கால்வாயையொட்டி பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அருகிலேயே உள்ள மின்கம்பம் வலுவிழுந்து சாய்ந்து கீழே விழும் அபாய நிலை உள்ளது. இதன் காரணமாக அசம்பாவித சம்பவம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. அதற்கு முன்பு பள்ளத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?