சென்னை குமணன்சாவடியில் இருந்து எம்.ஜி.ஆர். மெடிக்கல் கல்லூரி செல்லும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போருர் அருகே உள்ள சாலையில் ஆங்காங்கே மேடு பள்ளமாக காணப்படுகிறது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஒட்டிகள் மிகுந்த அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வாகன ஒட்டிகள் கோரிக்கை வைக்கின்றனர்.