சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள சில சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் சாலையில் பயணிக்கும் வாகனஓட்டிகள் கீழே விழுந்து சிறு, சிறு காயம் அடைகின்றனர். சாலையில் பயணிப்பதால் வாகனங்களும் அவ்வப்போது பழுதாகிறது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.