ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2025-11-23 10:10 GMT

பெரம்பலூர் மாவட்டம் காரணமங்கலம் கிராமத்தில் உள்ள நடுத்தெருவில் அமைக்கப்பட்டுள்ள சாலையில் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதால், இந்த வழியாக கனரக வாகனங்கள் செல்லும் பொழுது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் இந்த சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்