வாகன ஓட்டிகள் அவதி

Update: 2025-11-16 11:22 GMT

அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி சாலையானது முக்கிய சாலைகளில் ஒன்றாக உள்ளது. இந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் கனரக வாகனங்கள் இந்த சாலையில் அதிகளவில் சென்று வருகின்றன. இந்த வாகனங்களில் பெரும்பாலான கனரக வாகனங்கள் தார்ப்பாய் கொண்டு மூடாமல் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் கனரக வாகனங்களின் பின்னால் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அதிகம் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு அனைத்து கனரக வாகனங்களும் தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டு பொருட்கள் ஏற்றிச்செல்வதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்