சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சுற்றியுள்ள சில கிராமப்புற சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அச்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் அவதிடையந்து வருகின்றனர். மேலும் சில வாகன ஓட்டிகள் சிறு, சிறு விபத்துகளையும் சந்தித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மேற்கண்ட அப்பகுதியில் சேதமடைந்த சாலையை சீரமைத்துதர வேண்டும்.