காஞ்சீபுரம் மாவட்டம், மாங்காடு பட்டூர் கூட்ரோடு, என்.எஸ்.ஏ. அவென்யூவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த தெருவின் ஓரங்களில் முள்செடிகள் வளர்ந்து போக்குவரத்துக்கு சிரமமாக உள்ளது. இதேபோல சாலைகளில் உலா வரும் எருமை மாடுகளால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்குகிறார்கள். இதை சரிசெய்ய சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.