குண்டும், குழியுமான தார் சாலை

Update: 2025-11-09 16:08 GMT

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா, நாரணமங்கலம் கிராமத்தில் உள்ள நடுத்தெருவில் தார் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தார் சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ -மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்