விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கலங்காபேரி புதூர் செல்லும் சாலை முற்றிலும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேலும் இந்த சாலையால் அவ்வப்போது சிறு சிறு விபத்துகளும் நடந்து வருகின்றது. எனவே அதிகாரிகள் மேற்கண்ட சாலையை சீரமைத்து தர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.