சேலம் பெரியார் மேம்பாலத்தின் இருபுறங்களிலும் செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் செல்லும்போது விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. மேலும் மேம்பாலத்தில் விரிசல் விழுந்து அசம்பாவிதங்கள் ஏற்படலாம். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் மேம்பாலத்தில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், சேலம்.