ஈரோடு அமராவதி நகரில் உள்ள ராகவேந்திரா நகரில் பழுதடைந்த சாலையை சீரமைக்க கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சாலை தோண்டப்பட்டது. அதன்பின்னர் பணி நடக்கவில்லை. அப்படியே பாதியிலேயே விட்டுவிட்டனர். இதனால் அந்த வழியாக வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்ல சிரமமாக உள்ளது. எனவே பாதியில் நிற்கும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.