ஓசூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், சர்வீஸ் சாலை அருகே உள்ள தனியார் மருத்துவமனை பகுதியில் இருந்து முனீஸ்வர் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே மாநகராட்சி நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி உனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முரளி, ஓசூர்.