விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா பாலவநத்தம் முதல் வலுக்கலொட்டி வரை செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையை பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் விபத்துகளிலும் சிக்குகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.