ராசிபுரம், ஆண்டகலூர் கேட்டிலிருந்து திருச்செங்கோடு செல்லும் வழியில் அடுத்தடுத்து தோனமேடு, பாலப்பாளையம் பஸ் நிறுத்தங்கள் உள்ளன. இந்த இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் வேகத்தடைகள் இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்குகின்றனர். எனவே அந்த 2 பஸ் நிறுத்தங்களின் சாலைகளில் இருபுறங்களிலும் வேகத்தடைகள் தெரியும் வகையில் ஒளிரும் பட்டைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முருகேசன், ராசிபுரம்.