ஓசூர் மாநகராட்சி 21-வது வார்டுக்குட்பட்ட கொத்தூர் பகுதி, நாதன் நகரில் அதிகளவில் தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதனால் எப்போதும் இந்த பகுதி பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் கொத்தூர் வளைவு சாலை பகுதி குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இந்த சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
-மாதன், ஓசூர்.