தார்சாலை அமைக்க வேண்டும்

Update: 2025-10-26 11:37 GMT

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே மாத்தூர் ஊராட்சி கண்ணதாசன் சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் முற்றிலும் சிதிலமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய தார்சாலை அமைத்துத்தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்