பெரம்பலூர் ஒன்றியம் செங்குணம் அம்பேத்கர் சிலை முதல் பாடைமாற்றி வரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தார்சாலையில் தொடக்கப்பள்ளி அருகில் உள்பட சில இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டது. ஆனால் இந்த வேகத்தடையில் வெள்ளை வர்ண கோடுகள் பூசப்படாமல் உள்ளதால் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சாலையில் வேகத்தடை இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை மோதி நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருவதாக ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வேகத்தடையில் வெள்ளை வர்ண கோடுகள் பூசினர். இதற்கு செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.