வாகனஓட்டிகள் சிரமம்

Update: 2025-10-19 09:45 GMT

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலான சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன. இதனால் இச்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேலும் இந்த சாலைகளில் அவ்வப்போது சிறு, சிறு விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விபத்துகளை தவிர்க்க மேற்கண்ட சாலைகளை சீரமைத்துதர நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்

சாலை வசதி