அளுக்குளி கோபிபாளையம் கிராமம் அம்பேத்கர் நகர் அருகே அம்மன்நகரில் மண் சாலை உள்ளது. இதனால் அருகே உள்ள பாசன வாய்க்காலில் தண்ணீர் அதிகளவு வரும்போது வழிந்து மண் சாலையில் ஓடுகிறது. இதன் காரணமாக சாலை சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. நடந்து செல்லவும், வாகனங்களில் செல்லவும் முடியவில்லை. எனவே எங்கள் வீதியில் சிமெண்ட் சாலை அல்லது தார் சாலை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.