கும்பகோணம் பகுதியில் நீலத்தநல்லூர்-தேவநாஞ்சேரி சாலை உள்ளது. இந்த சாலை குண்டும்,குழியுமாக இருக்கிறது. மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல தேங்குகிறது. இதனால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை உருவாகிறது. வாகன ஓட்டிகள் சிரமத்துடன் அந்த வழியாக செல்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைத்து மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.