ரெட்டிச்சாவடி - பூசாரிப்பாளையம் இடையே உள்ள சுமார் 2 கி.மீ. தூரமுள்ள தார் சாலையானது பலத்த சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே புதிதாக தார்சாலை அமைத்துதர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.