மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள தீயணைப்பு நிலையத்தில் இருந்து திடீர் நகர் போலீஸ் நிலையம் பாலம் தொடக்கம் வரை உள்ள பிரதான சாலை முழுவதும் ஆங்காங்கே சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றது. தற்போது பெய்து வரும் மழையால் அப்பள்ளங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.