விருதுநகர் அருகே பாவாலி கிராமத்தில் உள்ள சாலைகள் முற்றிலுமாக சேதமடைந்து ஆங்காங்கே கற்குவியல்களாக உள்ளது. இதனால் அப்பகுதியல் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் சிரமம்.அடைந்து வருகின்றனர். மேலும் இந்த சாலையில் வாகன ஓட்டிகள் அவ்வப்போது விபத்துகளில் சிக்கி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.