சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் நகர் பகுதியில் உள்ள சில முக்கிய சாலைகள் முற்றிலுமாக சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் தற்போது பெய்து வரும் பருவமழையால் தண்ணீர் சாலையில் அதிகளவில் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்துகின்றது. இதனால் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.