விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2025-09-28 10:34 GMT

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் அரியலூரில் இருந்து காரைக்குறிச்சி செல்லும் சாலையில் உள்ள குணமங்கலம், முத்துவாஞ்சேரி, சாத்தம்பாடி, கோவிந்தபுத்தூர், ஸ்ரீபுரந்தான் ஆகிய கிராமங்களில் சோளம், கடலை போன்ற தானியங்களை அப்பகுதியை சேர்ந்தவர்கள் சாலையில் காய வைக்கின்றனர். இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் வாகனங்கள் ஒதுங்கி செல்ல முடியாமல் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்