பழனியில் இருந்து நேதாஜிநகர் செல்லும் சாலை சேதமடைந்து மேடு பள்ளமாக மாறிவிட்டது. மேலும் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சாலையில் பரவிக்கிடக்கின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சேதமடைந்த சாலையை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.