அரியலூர்-கல்லங்குறிச்சி சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. தற்போது இந்த வழியாக கல்லங்குறிச்சி பெருமாள் கோவிலுக்கு பக்தர்கள் அதிகளவில் சென்று வருகின்றனர். பல ஆண்டுகளாக கல்லங்குறிச்சி சாலையில் அதிகளவில் புழுதி பறந்து வருகிறது. இந்த புழுதிகள் காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.