புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா அரிமளம் ராயவரம் மற்றும் புதுமனை 1-ம் வீதி, 2-ம் வீதி பகுதிகளில் உள்ள சாலைகள் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இவ்வழியாக செல்லும் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். மேலும் சில இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.