சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் உள்ள சில சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இச்சாலையில் பயணிக்க முடியாமல் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமமடைகின்றனர். மேலும் சில வாகன ஓட்டிகள் நிலைத்தடுமாறி கீழே தவறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.