வாகன ஓட்டிகள் அவதி

Update: 2025-09-14 11:59 GMT

அரியலூர் - திருச்சி சாலையானது நகரின் முக்கிய சாலைகளில் ஒன்றாக திகழ்கிறது. இந்த சாலை வழியாக தினமும் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் மண் ஏற்றிச்செல்லப்படுகிறது. இதன் காரணமாக பழைய குப்பைக்கிடங்கு அருகே சாலை முழுவதும் மண் பரவி காணப்படுகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களில் மண் துகள்கள் பறந்து விழுவதால், அவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும், மழைக்காலங்களில் இந்த சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் வாகனங்களின் டயர்கள் வழுக்கி, விபத்து ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்