அரியலூர் மாவட்டம் வஞ்சினபுரம் கிராமத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஏராளமான வீடுகளும் உள்ளது. இந்நிலையில், இந்த கிராமத்தில் உள்ள வடக்குத்தெரு சாலை முழுவதும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த சாலை போடப்பட்டு பல ஆண்டுகளுக்கு மேல் ஆனதால், இந்த சாலை முழுவதும் பெயர்ந்து, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. அவசர நேரத்தில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதற்கு கூட சிரமமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு சாலையை புதிதாக போட்டுத்தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.