சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் சில சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இச்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் மிகவும் சிரமமடைகின்றனர். மேலும், வாகனஓட்டிகள் கீழே விழுந்து காயமடையும் சம்பவங்களும் நடந்து வருகிறது. எனவே சேதமடைந்த சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?