கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கரியமாணிக்கபுரம் பகுதியில் சாலையின் தென்புறம் சுசீந்திரம் குளம் உள்ளது. இந்த குளத்தின் வடக்கு பகுதியில் சாலையோரத்தில் விபத்து தடுப்பு கம்பி அமைக்கப்பட்டுள்ளது. மண்ணரிப்பு காரணமாக இந்த விபத்து தடுப்பு கம்பியை தாங்கி நிற்கும் சுவரின் தூண்கள் சரிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த மண்ணரிப்பு சாலை வரை இருக்கிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி சேதமடைந்து காணப்படும் விபத்து தடுப்பு சுவரை அகற்றி விட்டு அங்கு கான்கிரீட்டால் ஆன தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.